சிரவை ஆதீனம் - சமயப்பணிகள்
ஆதீனக்கோயில் திருப்பணிகள் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் ஆகிய ஞானதீபத்தில் ஏற்றப்பட்ட சுடர் விளக்காக 14 . 06 . 1994 அன்று நான்காவது குருமகா சந்நிதானமாக அருளாட்சி ஏற்றார். 08 . 12 . 2001 அன்று தவத்திரு குருமகாசந்நிதானங்களுக்கு பழனியில் அருளாட்சி விழா மிகச்சிறப்பாக முறைப்படி நடைபெற்றது. 15 . 09 . 1996 இல் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து திருக்கோவில்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. 13 . 0 4 . 2009 அன்று அருள்மிகு பைரவர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு. 30 . 0 8 . 2009 அருள்மிகு தண்டபாணிக்கடவுள் உள்ளிட்ட அறுசமயக் கோயில்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, 16 , 000 சதுரடிப் பரப்பில் திருக்கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகுந்த பொருட்செலவில் திருக்கோயில் திருப்பணி, திருமதில் திருப்பணி, மடப்பள்ளி, வாகன நிறுத்தம் எனக் கட்டி முடிக்கப்பட்டன. 20 , 21 . 12 . 2011 நவக்கிரக திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா. 23 . 03 . 2012 அறுபத்துமூவர் சிலை நீராட்டு, 108 கோ பூசை, 1008 திருவிளக்கு வழிபாடு. 18 . 11 . 2012 கௌமாரம் சுசீலா பன்...