பேரூர் ஆதீனம் - கல்விப்பணி
கல்விப்பணி காமராஜர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபொழுது பள்ளி செல்லும் குழந்தைகள் பசியோடு கல்வி கற்க இயலாது என்று உணர்ந்து அவர்களின் வயிற்றுத்தீ தணிய மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த மதிய உணவு வழங்கும் திட்டம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன் முதலில் சர்க்கரைப் பொங்கல் வழங்கி தொடங்கப்பட்டது. இத்தகு பெருமையுடையது பள்ளி. தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளால் நம் தமிழ்க் கல்லூரியில் சத்வித்யா சன்மார்க்க சங்கமானது தொடங்கப்பெற்றது. அச்சங்கம் நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் பெருமையுடையது. 1952 ஆம் ஆண்டு தவத்திருசாந்தலிங்க அடிகளார் பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகச முதாயத்திற்கு ஆன்றோர்களையும் , சான்றோர்களையும் தந்துள்ளது . குருகுல மரபை உள்ளடக்கிய நவீன கல்விமுறையில் ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை கற்க கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் நமது அடிகளார் . அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , மொரீஷி...